மதுரையும் மதுரை நிமித்தமும்
மதுரையும் மதுரை நிமித்தமும் முன்பு ஒரு முறை நா.முத்துக்குமாரின் வரிகளை கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன், அதை மீண்டும் ஒருமுறை பலமாக உணர்ந்தேன். "பயணம் செய்வதற்கு போதுமான பணமும், பயணம் செய்வதற்கான மனநிலையும் உள்ளது தான் உலகிலேயே மிகப் பெரிய சொத்து!" வீட்டில் அப்பா அம்மாவுக்கு மருத்துவப் பிரச்சனைகள், அலுவலகப் பணி, சரியான திட்டமில்லாமல் குறும்படம் எடுப்பதாக இறங்கி சிக்கிக்கொண்ட கடன் என இவற்றை எல்லாம் ஓரம் கட்டி முடிக்கும் போது தேர்தல் நேரப் பணி... அப்படி இப்படியென்று ஒரு வழியாக பயணத்திற்கான மனநிலையும் சூழலும் அமைந்தது. இயேசு நாதர் மூன்றாம் நாளே உயிர்த்தெழுந்துவிட்டார், அவர் மட்டும் நான்காம் நாள் உயிர்த்தெழுந்திருந்தால், நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்திருக்குமே! இப்போது மூன்று நாள் தான் விடுமுறை. சரி எங்கே செல்லலாம்? ஒடிசா! மூன்று நாட்களில் சென்று வரமுடியுமா என்று சங்கடமே படாமல் IRCTC-யில் இரயில் பயணம் நேரம் பார்த்துவிட்டு, சரி தமிழ்நாட்டிற்குள் எங்கு செல்லலாம்?, மதுரை. மீனாட்சி அம்மன், நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம் இல்லாமல் வேறு எங்காவது போக வேண்டும் என முடிவு செய்