Posts

Showing posts from July, 2018

புதுக்கவிதையல்ல புலம்பல்களே

Image
தேயவைத்தாள்... அ வளின் அருகில் செல்கையில் அவள் அழகு தேய்கிறது... அழகு மெலனினால் அல்ல... அவளிட்ட காஜல்களால் அல்ல... அவளின் வட்ட கண்ணாடியால் அல்ல... கவிஞர்களின் வழக்கம் போல வாள் விழிகளால் அல்ல... மூக்கின் கீழ் பெண்மையை தாண்டிய மீசையால் அல்ல... முன்னாலும் பின்னாலும் சற்று தூக்கலாக இருந்ததால் அல்ல... கூந்தல் குட்டையா? அல்ல...அல்ல... மேலும் கண்ணத்தின் நடுவிலிருந்த கரும்புள்ளியா?! அல்லவே... அல்ல... பொறுமையிருந்தால் கேளுங்கள்... அவளுக்கு நீண்ட தூரம் நெடும் பயணித்திற்கு பிறகு பெரும் நித்திரையில் ஆர்வமிருக்கும் என நினைத்திருந்தேன்... தேயவைத்தாள் சின்னதொரு காவிக்கண்டில்(chocolate) அவளாவி செல்கையில்... ஓங்கிய ஓவியத்தில் உள்ள புள்ளியையும் புலனாய்வு செய்து பூரிப்பாள் என்றிருந்தேன், தேயவைத்தாள் புள்ளியளவும் ஓவியத்தில் பூரிப்பில்லையென்று... சந்தம் சாரீரம் பல்லவி சரணமென இசையை இழுத்துப்போட்டு ரசிப்பாள்- எண்ணியிருந்தேன், இமானின் 'கூடமேல கூடவெச்சு' பிடிக்கும் மற்றபடி 'ம்ம்' என இழுத்த போது மீண்டும் தேயவைத்தாள்... கம