நகுவா நயனா (சிறுகதை)
நகுவா நயனா ம கிழ்ச்சியை பிறரிடம் பகிர அது இரட்டிப்பாகும், துக்கத்தை பிறரிடம் பகிர அது பாதியாய் குறையும் என்பார்கள். ஆனால், சில மகிழ்ச்சியையும் சரி, சில துக்கத்தையும் சரி எவரிடமும் பகிர முடியாது. அப்படி பகிர முடியாத இரகசியங்கள் தான் கடவுளைத் தேடச் சொல்கிறது. கடவுளிடம் பகிர்வோம் என்று மனதை தேத்திக்கொள்ள வைக்கிறது. ஆனால் ஜனார்த்தனனுக்கு கடவுள் நம்பிக்கை துளியும் இல்லையே. கோத்தகிரி வட்டாரமே அவனது கட்டுப்பாட்டில், அவனது அதிகாரத்தில் இயங்கிக் கொண்டிருக்க, அப்போது அவனுடைய மனதின் கட்டுப்பாடு அவனிடம் இல்லை. முகத்தை முழுவதும் சவரம் செய்ததால், நாற்பது வயதின் அடையாளமான சதை முகத்திற்கு கீழே கழுத்தை கொஞ்சம் மறைத்துக் கொண்டிருப்பது, எதிரில் உள்ள அவனுடைய அலுவலகக் கண்ணாடியில், நன்றாகத் தெரிகிறது. அதனைத் தடவிக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். ஜனவரியின் குளிருக்கு காலை பதினோரு மணியெல்லாம் தெரியவில்லை. எழுந்து அறையின் ஹீட்டரை போட்டுவிட்டு அமர்ந்தான். அலுவலக உதவியாளர் பம்பியபடி கதவிடம் வந்து நின்றார். ஜனார்த்தனன் "வாங்க" என்றதும், அலுவலக வருகை குறிப்பேடுகளை கட்டிக்கொண்டு உள்ளே வந்தார். அதை அவன