புரட்சிகரமான சிறுகதை
இரவு உணவாக அம்மா கடைசி பூரியை எனக்கு எடுத்து வந்து கொடுத்த போது தான் புரட்சிகரமான, நாட்டுக்கு ஒரு புதிய வெளிச்சம் தரக்கூடிய அந்த சிறுகதையின் கரு என் மனதில் தோன்றிற்று. உடனே எழுதிவிட வேண்டுமென்று சாப்பிட்டதும் எழுத அமர்ந்தேன். அகோரமான உருவம் உடைய அந்த சாத்தான், வாயில் இரத்தம் சொட்ட எனதருகே வந்து அமர்ந்தது. எப்போது வேண்டுமானாலும் என்னை கடிக்கத் தயார் நிலையில் அது இருப்பதை உணர்ந்தேன். அதை பொருட் படுத்தாமல் நான் அந்த புரட்சிகரமான கதைக்குள் குதித்தேன். கதையின் மூல கதாப்பாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்? யோசித்த போது பள்ளி நண்பன் ஜான் பிரகாஷின் நினைவு வந்தது. அந்தப் பெயர் சரியாக இருக்கும். ஜானிடம் பேசி பல நாட்கள் இருக்கும். அவன் கர்நாடகாவில் உள்ள தார்வாடில் கார்களுக்கு உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனத்தில் ஆறு மாதமாக வேலை பார்த்து வருகிறான். தனியாகத் தான் அறை எடுத்து தங்கியிருப்பதாக கூறியிருந்தான். அவனுக்கு அழைத்து இப்போது பேச வேண்டும் என்றுமாய் தோன்றியது. அழைத்தேன். "என்னடா அதிசயம்! நீயே கூப்பிட்டிருக்க? எதாவது மேட்டரா?" "இல்ல, சும்மாதான் என்ன பன்னீட்டு இருக்க?" என்ற