முதல் வரியிலிருந்து படி
முதல் வரியிலிருந்து படி தலைப்பை இறுதியாகச் சூட்டிக்கொள்ளலாமென்று எண்ணி நினைவில் வரும் சம்பவங்களைக் கதையாகத் திரட்டி கணினித் திரையில் விரலடிக்க வடிக்கத் தொடங்குகிறார் ... கதை ஆரம்பமாகிறது - கோபாலன் ஏதோ விரக்தியுடன் வீட்டுக்குள் நுழைகிறார் " எப்பப் பாத்தாலும் ஃபோனு ஃபோனு ... எழவெடுத்த ஃபோனு , எடுத்து வெய்லே அத .. உருப்படுறதுக்கு ஒரு ச்சோலிய பாக்குறியாவே நீய்யு ... போய்க் கடைல ஒக்கோருலே ... கணக்கு வழக்க பாரு ... போ " மகனான மாரி மனோகரிடம் கடிந்தார் ... எரிச்சலுடன் எழுந்து எதுவும் பதில் பேசாமல் கடைக்குக் கிளம்பி நடந்தான் மாரி . சொந்தமான துணிக்கடைக்குச் சென்றவன் , கடைக்கு உள்ளே நுழையும் முன்பே " யோவ் ... இந்தாயா ... ஏன் இன்னும் மீன் தொட்டிய சுத்தம் பன்னுல ... சுத்தம் பன்னச் சொல்லி ஒரு ஆள் உங்க கிட்ட என்னேரமும் அழுதுட்டே இருக்கனுமா ?" தன் அப்பா வயதொத்த கிருஷ்ண சாமியிடம் கொப்பளித்தான் மாரி . அப்பா ஏற்றி வைத்த எரிச்ச