கல்யாணம்
சிறுகதை- கல்யாணம் அண்ணா நகரில் ₹15,000 வாடகை கட்டும், வாகை மரம் சூழ்ந்த, அந்த வீட்டிலிருந்து தான் அவன் அம்மாவின் சத்தம் வந்தது. "கௌசு... அந்த கருமத்த நிறுத்தீட்டு இங்க வந்து ஸ்லாப் மேல இருக்க பூரி மிசுன எடுத்துக்கொடு". ஸ்பாட்டிஃபை பாட்கேஸ்ட்டில் ஆர்.ஜே.பாலாஜியின் நாலணா முறுக்கில் 'முடியுதிர் காலம்' என்று முடி உதிர்வதைப் பற்றி கேட்ட பயத்தில் தலையணையை அண்டக் கொடுத்துப் படுத்திருந்தான் கௌதம். "தம்பி... பூரி மிசுனுடா" என்று மீண்டும் பயங்கரமாக சத்தம் வரவே சமையலறைக்கு எழுந்து சென்றான். ஆர்.ஜே. பாலாஜியை அமுத்தினான். மேலே இருக்கும் பூரி மிசுனை எடுக்கும் போது, "அரணாக்கொடி என்னடா இவ்வளவு இறுக்கமா போட்டிருக்க?!" அவன் பதிலுக்கு யோசிக்காமல் அம்மாவே "வயிறு பெருசாயிட்டு இருக்கு... முதல்ல அதக் கொர" என்றாள். வெங்காயம் அரிந்து கொண்டிருந்தாள். கீழே பாக்ஸரும், வெறும் மேலுமாக நின்ற கௌதம் ஒரு கண்ணை தேய்த்துக் கொண்டே "அம்மா... நான் இந்த பொண்ணுட்டையும் கூப்பிட்டு சொல்லத் தான் போறேன்" என்று அம்மாவின் கண்களைப் பார்த்தான். பதிலில்லை. வெங்காயம் பொடி பொடி