மெஸ்மரைஸிங்
'அவன்' தான் முதன்மை கதாப்பாத்திரம், அவனைச் சுற்றியே காட்சிகள் நகரும்... காட்சி:1 நேரம் இரவு ஒன்பது இருக்கும், பேருந்தில், இளையராஜா பாடல், 'சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்' ஒலித்துக் கொண்டிருக்கிறது, அதிகக் கூட்டம் இல்லை, மொத்தமே ஓட்டுனர் நடுத்துனரோடு சேர்த்தி ஒரு பத்து பேர் தான் இருப்பார்கள், அப்போது மனைவி: உங்க அண்ணனுக்கு எதுல கஞ்சத்தனமா இருக்கிறதுனு ஒரு அறிவே இல்ல... சாப்பாடு கொஞ்சம் சேத்தி வந்திருந்தாலும் நல்ல ஆளா பாத்து போடமாட்டாரா? அவன்: (அதனை பொருட் படுத்தாமல் பேருந்தில் ஓடும் பாட்டோடு சேர்ந்து) "கண்ணே என் கண் பட்ட காயம், கை வைக்கத் தானாக ஆறும்" என காற்றில் ஆடும் அவள் கூந்தலை ஒதுக்குகிறான். மனைவி: ஏய்,... பாப்பா பாக்குது... அவன்: பாப்பா தான?(ஜன்னல் ஓரத்தில் வேடிக்கை பார்த்து வந்த மகளிடம்) சாமி இங்க பாருங்க (மகளை எடுத்து மடியில் வைத்து) நான் இப்ப அம்மாக்கு முத்தம் கொடுத்துக்குட்டா?" மகள்: ஓ... அப்ப, நான் உங்களுக்கு முத்தம் கொடுப்ப... அவன்: வெல்கம் டியர்... இங்க வாங்க... (என தன் மகளையும், மனைவியையும் பக்கத்தில