பேனா நினைவுகள்
பேனா நினைவுகள் (கட்டாயம் கவிதை கிடையாது) 'இதோ இந்த கிணத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்த மோசன் கடைசியாக எனக்கு கொடுத்தது தான் நேத்து காட்டின பேனா' என்று சித்தப்பா காட்டிய பேனா, அக்கா அப்பாவிடம் அழுத போதும் அழுத்தமாய் நான் காட்டிக்கொள்ளவில்லை நான் தான் எடுத்தேனென்று, அடுத்த நாள் அக்காவுக்கு அழுது காய்ச்சலே வந்துவிட்டது, குருகியிருந்தது என் மனது, ஒருதுளியும் அக்கா என்னை சந்தேகிக்கவில்லையே... சமீபத்தில் அக்காவிடம் கூறினேன் அன்று நான் தான் உன் பேனாவை எடுத்தேனென்று 'எந்த பேனா?' அக்கா மறந்து போனாள்... பென்சில்களை வெறுக்க வைத்த பேனாக்கள், ஒன்றாவது படிக்கையில் ரெனால்ட்ஸில் எழுதியதற்காக கார்த்தி மிஸ் அடித்தார் 'பென்சில் எங்க போச்சு' என்று... பாசிபருப்பு டப்பாவில் பத்து ரூபாய் எடுத்துவிட்டேன் தாஜுதீன் காட்டிய பேனா போல் வாங்க, அடுத்த நாள் பேனாவைப் பார்த்துவிட்டு அம்மா காட்டிவிட்டார் சீமாத்துக்குச்சியின் வலுவை... எப்போதும் லீக்கடிக்கும் என் அப்பா எனக்காக வாங்கிக்கொடுத்தப் பேனா... ஆறு பேர் நிறைந்த எங்கள் வகுப்பில் ஆளுக்கு ஐந்து ரூபாய்