வழக்கம்
தலையணையில் தேங்கிய சலைவாய் ஈரம்பட்டு எழுந்தேன்... முட்டி வலித்ததால் மூன்று முறை எழுந்து நின்றும் முழு மனதாய் இல்லாது மலம் தள்ளி அயர்ந்தேன்... முகத்தை கழுவையில் மூக்கோரம் புதிதாய் உதயமான பருவை பார்த்தேன், அடுத்த நாள் வரை அதற்கு ஆயுள் கொடுத்து கிள்ளுவதைத் தள்ளிவைத்தேன்... குளிக்கையில் நீர் ஓட்டையில் கொஞ்சம் முடிகள், கூல்லிப் எச்சங்கள், க்லீனிக் ப்ளஸ் மிச்சங்கள் கூடி நீர் தேங்கியது, குச்சியில்லை, செருப்பால் முயன்று குளித்து முடித்தேன்... இட்லி திண்ணும் போது எதையோ நினைத்தேன், நினைத்தது நினைவில்லை, மறந்தேன், நடந்தேன். அதே அண்ணா, அதே இடத்தில் பேப்பர் படித்தார், ஒரு முறை என்னை பார்த்து உதடு விரித்தார், நானும் விரித்தேன், கடந்தேன். அண்ணாவின் சட்டை நிறம்? பார்க்கவில்லை, பொட்டு வைத்திருந்தாரா? கவனிக்கவில்லை. இடைவேளையில் டீ குடித்தேன். சீலை விலகலில் இடுப்பு பார்த்தேன். அவளது பொட்டு அதுவும் கவனிக்க மறந்தேன்... போட்டோ எடுக்கிறார்கள் எடுத்துக்கொண்டேன், அவ்வப்போது சிரிக்கிறார்கள் சிரித்து வைத்தேன், படம் பார்த்தார்கள் பார்த்தேன், பரிசு எதிர்பார்த்தார்கள், எடு