பிரிவினை
பிரிவினை கு லமென்றும் இனமென்றும் குறித்த நிலமென்றும் நிலம் தனதென்றும் நிலத்தின் நிறம் தான் மட்டுமென்றும் குருதியும் மாறும் குலத்தாலென்றும் கடவுளும் அதற்கு உடந்தையென்றும் சத்தியம் செய்து பிரிவினை காக்கும் புத்தியோர் நடுவில் நான்... புணர்வதும் உணர்வதும் உணர்வதால் பூரிப்பதும் பூரித்த பூவுடலின் பிரிவினை பெண் ஆண்... ஆண்ணென்ற உயரம் கொண்டு பெண்ணியம் பேச பெருமை என்று பேசித்திரியும் பேதையர் நடுவில் நான்... இசையை ரசிக்க மதங்கள் தேவையா? இருக்கையில் அமர ஆற்றலாயினும் கோத்திரம் தேவையா? மதச்சார்பற்றது நம் இந்தியா! நம்புங்கள், மதச்சார்பற்றது நம் இந்தியா, தேசப்பற்று கொண்டு பிரிவினை வளர்ந்தால் பிரிவினை மூலம் பிறன்மணை நொந்தால் தமிழனும் அல்ல இந்தியனும் அல்ல சார்பும் சாதியும் தாண்டிய மனிதன் நான்... நான்- சா.கவியரசன்.. . Short film இல் ஒரு காட்சியை படமாக்க எழுதியது