சரணம்
சரணம் - சிறுகதை நீங்கள் எப்பாவது ஆண்களின் பொது கழிப்பிடத்திற்குள் நுழைந்திருக்கிறீர்களா? குறிப்பாக அரசுப் பேருந்து நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறைக்குள் சென்றிருக்கிறீர்களா? இன்னொரு இடைக் கேள்வி, கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு தங்களுக்கு இருக்கிறது?! ஆண்களின் பொது கழிவறைக்கு வருவோம், உமட்டும் யூரியா நெடியுடன் பீடி, சிகரெட் கலந்த மலத்தின் கலவையான நாற்றம். மலம் கழிப்பதற்கு ஐந்து தனி அறைகள், முதல் அறையில் குழாய் உடைந்து, அதிலிருந்து நீர் சென்று, குழாய்க்கும் மலக்குழிக்கும் இடையே பாசி வளர்ந்திருக்கிறது. இன்னொரு அறையில், ஓரத்தில் மூன்று மதுக் குடுவைகள், அதில் அரை வாசிக்கு செம்மஞ்சல் நிறத்தில் திரவம். அது சிறுநீரா? அல்லது மீதமான மதுவா? என்ற சந்தேகம், அடுத்த அறையில் குழி நிரம்பி, நீர் மிதக்க, அது நிறைய வெவ்வேறு வடிவத்தில் மலம் மிதக்க, உடனே அடுத்த அறைக்குச் சென்றேன், ஓரத்தில் வாந்தி, ஒழுங்காக நீர் ஊற்றாமல் மலம் மிதக்கும் குழி, வேண்டாமென்று அடுத்து அறை, கதவை நீக்கினால் 'யெப்பா' என்ற சாதாரண பதட்டத்துடன் பீடி குடித்துக் கொண்டு ஒருவர் குத்தவைத்து மலம் கழித்துக் கொண்டிருக்கிறார், அங்கு தாழ்